யாழில் உள்ள ஒருவருக்கு நெதர்லாந்திலிருந்து வந்த பரிசுப்பொதி சிக்கியது
26 மில்லியன் பெறுமதியான மெத்தம்பெட்டமைன் அடங்கிய எக்ஸ்டசி மாத்திரைகள் நெதர்லாந்தில் இருந்து கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனைக்கு பரிசுப் பொதியாக அனுப்பப்பட்ட நிலையில் சுங்க அதிகாரிகளால் இன்று (15) கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுங்க பிரதிப் பணிப்பாளர் சுதத் சில்வா (Sudaththa Silva) தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒருவருக்கு பரிசுப் பொதி அனுப்பப்பட்டுள்ளது. 1 கிலோ 600 கிராம் எடை கொண்ட சுமார் 4,000 மருந்து மாத்திரைகள், பார்சலில் உள்ள சீட்டுகளின் அட்டைப் பெட்டியில் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
கொழும்பு, வெள்ளவத்தையில் வசிக்கும் 30 வயதுடைய நபர் ஒருவர், இந்த பரிசுப் பொதியைப் பெறுவதற்காக கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்திற்கு வந்திருந்தார்.
இதனையடுத்து குறித்த நபர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரும் போதைப் பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.