எரிபொருள் வரிசையில் மோதல்: ஒருவருக்கு கத்திக்குத்து: அறுவர் கைது
பதுளையில் வாகனங்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு வரிசையில் இருந்தவர்களிடையே ஏற்பட்ட மோதலில், தனியார் பேருந்து சாரதியொருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதுளை பிரதான பேருந்து நிலையத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் (22) மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 06 பேர், நேற்று (23) காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தனியார் பேருந்துகளுக்கு எரிபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு பேருந்துகள் வரிசைகள் நின்ற போது, பின்னாலிருந்த பேருந்து ஒன்று முன்னால் சென்று எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முயற்சித்த போது, பெரும் அமைதியின்மையும் பதற்றமும் ஏற்பட்டது.
இதனையடுத்து வரிசையிலிருந்த பிறிதொரு தனியார் பேருந்து சாரதி, முன்னால் சென்று எரிபொருளைப் பெற முயற்சித்த பேருந்து சாரதியை, கத்தியால் குத்திவிட்டு, கத்தியுடன் தமது பேருந்தில் தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறு தப்பிச் சென்றவரையும் அவருக்கு உதவியவர்களையும் கைது செய்யுமாறு, எரிபொருளைப் பெற வந்தவர்கள், பதுளை பிரதான வீதியை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுவரை கத்திக் குத்துக்கு
இலக்கானவரை வைத்தியசாலைக்கு
கொண்டு செல்வதையும்
போராட்டக்காரர்கள் தடுத்திருந்த
நிலையில், இரத்த வெள்ளத்தில்
கிடந்த தனியார் பேருந்து சாரதியை,
பதுளை காவல்துறையினர் தலையிட்டு
வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்