தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல முடியாதா? இராணுவத் தளபதி தகவல்
corona
people
shavendra silva
vaccine card
By Shalini
பொது இடங்களுக்கு செல்லும் போது, தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை சோதனை செய்யும் தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை.
தேவை ஏற்படும் பட்சத்தில் எவ்வாறான தீர்மானத்தையும் எட்டுவது குறித்து ஆராயப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல முடியாது என்ற எந்தவொரு சுகாதார வழிகாட்டல்களும் தற்போது வெளியிடப்படவில்லை.
எனினும், அவ்வாறான சட்டம் கொண்டுவரப்படும் என தாம் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த விடயம் குறித்து எதிர்வரும் காலங்களில் ஆராயப்படும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்