சிறைக்கு லொஹான் ரத்வத்தையுடன் அழகுராணி சென்றது உண்மையே - உறுதிப்படுத்திய குழு
மாணிக்கம் மற்றும் நகை தொழில்துறை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை அழகு ராணி புஷ்பிகா டி சில்வா மறுத்திருந்தார்.
எனினும், கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு, அவர் சம்பவ இடத்திற்குச் சென்றதை மீண்டும் உறுதிப்படுத்தியது. திருமதி புஷ்பிகா டி சில்வா தான் லொஹான் ரத்வத்தையுடன் வெலிக்கடை சிறைச்சாலையைப் பார்க்கச் சென்றார் என்று கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்தார்.
அமைச்சர் லொஹான் ரத்வத்தையுடன் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றவர்களில் ஒரு அழகு ராணியும் இருப்பதாக ஊடகங்களில் வந்த செய்திகளைத் தொடர்ந்து, புஷ்பிகா டி சில்வா தனது சமூக ஊடக பதிவில், “நான் அங்கு செல்லவில்லை. அந்தக் கதைகள் பொய்யானவை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.