தமிழீழத் தேசியக் கொடியை அங்கீகரித்த கனடாவின் நகரம்… ஶ்ரீலங்காவுக்கு புதிய சிக்கலா?

By Theepachelvan Dec 07, 2025 11:16 AM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report
Courtesy: தீபச்செல்வன்

இனப்படுகொலைக்குள்ளான ஈழத் தமிழர்களின் விடயத்தில் கனடா தொடர்ந்தும் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் பிரம்டன் நகரம் தமிழீழத் தேசியக் கொடியை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.

பிரம்டன் நகரசபை, மேயர் பற்றிக் பிரவுன் தலைமையில், நவம்பர் 21ஆம் ஆம் நாளை "தமிழீழத் தேசியக் கொடி தினமாகப்" (Tamil Eelam National Flag Day) பிரகடனத்தும் நிகழ்வு நடந்தது.

இந்த விடயம் உலகமெங்கும் வாழும் ஈழத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஶ்ரீலங்கா அரசு இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பிரம்டனில் பறந்த புலிக்கொடி

கனடா நாட்டின் நகரம் ஒன்றின் இந்த அங்கீகாரம் என்பது வெறுமனே ஒரு அடையாள ரீதியான சமிக்ஞையல்ல; இது கனடாவில் வாழும் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் கலாச்சார அடையாளம், மரபுரிமை மற்றும் அவர்கள் இழந்த தாயகக் கனவுகளுக்கான மரியாதையாக கருதப்படுகின்றது.

கடந்த நவம்பர் 21, தமிழீழத் தேசியக் கொடி நாளின்போது மேயர் பற்றிக் பிரவுணால் நகர மண்டபத்தின் முன்புறம் தேசியக்கொடி ஏற்றப்பட்ட நிகழ்வுகள், கனடியத் தமிழ் சமூகத்திற்குப் பெரும் உணர்ச்சிபூர்வமான நிகழ்வாக அமைந்தது.

கனேடிய மண்ணில் தமிழர்களின் இருப்பு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தருணமுமாகும். புலிக்கொடியை அங்கீகரித்தமைக்கான பிரகடனத்தை பிரம்டன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக கடந்த நவம்பர் 21ஆம் நாளன்று வெளியிட்டு வைத்தார்.

கொடியை ஏற்றியதுடன் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு அதற்கான சான்றுப் பத்திரமும் கையளிக்கப்பட்டது. மேயர் பற்றிக் பிரவுண் அங்கீரித்து வழங்கியுள்ள அறிவிப்பில், இந்த நாள் ஈழத்தமிழ் தேசத்தின்கூட்டு அடையாளத்தையும் 1930 களில் இருந்து தங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான அவர்களின் தொடர்ச்சியான எதிர்பார்ப்பையும் குறிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

உலகளாவிய தமிழர் உரிமைகளின் குரல் என்பது தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிக்காக வாதிடுவதற்கும், தமிழ் வரலாற்றைப் பாதுகாப்பதற்கும், காப்பகப்படுத்துவதற்கும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மேம்படுத்துவதற்குமானதொரு அமைப்பாகும்.

இந்நாளில், புலிக்கொடி சம்பிரதாயமாக ஏற்றப்படுவதோடு இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை மதிக்கும் வகையில் தொடர்ச்சியான நிகழ்வுகள் மற்றும் பட்டறைகள் நடத்தப்படுகின்றன.

அதே நேரத்தில் தமிழ் வரலாறு கலாசாரம் அடையாளம் குறித்த உரையாடல்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பற்றிக் பிரவுண் வெளியிட்ட குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அர்ச்சுனா எம்.பியின் ஆபத்தான சாகசம் : பிரதமருக்கு பறந்த முறைப்பாடு!

அர்ச்சுனா எம்.பியின் ஆபத்தான சாகசம் : பிரதமருக்கு பறந்த முறைப்பாடு!

இனப்படுகொலையை ஏற்றுக்கொண்ட கனடா

பிரம்டன் போன்ற உள்ளூர் மட்ட அங்கீகாரங்கள், கனடாவின் பரந்த ஈழத் தமிழர் ஆதரவுப் போக்கின் ஒரு பகுதி என்பது இங்கு முக்கியத்துவமான விடயமாகும்.

கனடா எப்போதும் உலகெங்கிலும் நடக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்துள்ளது.

இலங்கை இனப்படுகொலைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த கனடாவின் நிலைப்பாடு, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்குச் சார்பாகவே இருந்துள்ளது.

கனடா பாராளுமன்றம், இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அத்துடன் ஆண்டுதோறும் மே 18ஆம் நாளை இனப்படுகொலை அறிவூட்டல் தினமாகவும் கனடா நாடு பிரகடனப்படுத்தியுள்ளது.

உலக நாடுகளின் வரிசையில் கனடாவின் இந்த நடவடிக்கைகளை ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் முன்னுதாரமான செயற்பாடாக கருதப்படுகிறது.

இந்தியாவில் தமிழ்நாட்டில் இனப்படுகொலைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அதனால் எதைச் சாதிக்க முடியும் என்று இலங்கை அரசு கேலி செய்தது. பிறகு இலங்கையில் வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதும் இலங்கை அரசு இப்பிடித்தான் பேசியது.

வட அமெரிக்காவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

வட அமெரிக்காவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இனப்படுகொலைக்கு நினைவுத்தூபி

ஆனால் அண்மைய காலத்தில் கனடா நாடே இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது. வரும் காலத்தில் இன்னமும் பல நாடுகள் இப்படி ஈழ இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளும் என்பது ஈழத் தமிழ் மக்களின் நம்பிக்கை.

அத்துடன் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கருதப்படும் இலங்கை அரசு அதிகாரிகள் மீது கனடா அரசாங்கம் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

கனடாவின் பல மாகாண மற்றும் மத்திய அரசியல்வாதிகள், தமிழ்த் தேசிய நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு, ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை நினைவுகொள்ளும் விதமாக பாரிய நினைவேந்தல் தூபி கடந்த மே 18 அன்று கனடாவில் நிறுவப்பட்டது. தமிழ் ஈழ வரைபடம் கொண்ட குறித்த நினைவேந்தல் தூபியகத்தில் இலங்கையில் நடந்த இனப் படுகொலைகளின் வரலாறு முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விடயத்தில் கனடா தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் பக்கம் நிற்பதன் அடையாளமாக இது அமைந்தது.

அத்துடன் இச்செயற்பாடு ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் விரைவில் விடுதலை கிடைக்கும் கனவு மலரும் இனப்படுகொலைக்கு நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியது.

வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கையர் கட்டுநாயக்காவில் அதிகாலைவேளை கைது

வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கையர் கட்டுநாயக்காவில் அதிகாலைவேளை கைது

ஜஸ்டின் ட்ரூடோவின் குரல் 

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் கடந்த 2023ஆம் ஆண்டு மே 18இல் வெளியிட்டுள்ள தீர்மானத்தில் இலங்கயைில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொண்டார்.

அதில் அவர், “நாங்கள் 14 வருடங்களிற்கு பின்னர் துன்பகரமான விதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைகூறுகின்றோம் என்றும் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையில் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் இழக்கப்பட்டன, பலர் காணாமல்போனார்கள் காயமடைந்தார்கள் இடம்பெயர்ந்தார்கள்.

கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் மற்றும் அர்த்தமற்ற வன்முறையால் ஏற்பட்ட துயரத்துடன் தொடர்ந்தும் வாழும் அவர்களின் குடும்பத்தவர்கள் குறித்து எமக்கு அக்கறைகள் உள்ளன…” என்று பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு தம் ஆதரவைத் தெரிவித்தார்.

அத்துடன். “கனடாவின் பல சமூகங்களில் நான் சந்தித்த பலர் தமிழ் கனடா பிரஜைகளின் கதைகள் மனித உரிமைகள் சமாதானம் ஜனநாயகம் போன்றவற்றை இலகுவாக கருதமுடியாது என்பதை நினைவுபடுத்தி நிற்கின்றன.

இதன்காரணமாகவே கடந்த வருடம் மே18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவுதினமாக நாங்கள் அங்கீகரித்தோம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் மோதலால் கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் உரிமைக்காகவும் இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளவர்களுக்காகக் குரல்கொடுப்பதை கனடா நிறுத்தாது…” என்றும் கனடா குறிப்பிட்டிருந்தது.

மனைவியின் உலக்கை தாக்குதலில் உயிரை விட்டார் கணவன்

மனைவியின் உலக்கை தாக்குதலில் உயிரை விட்டார் கணவன்

இலங்கை அரசின் எதிர்வினை

பிரம்டன் நகர மேயரின் இந்த அதிரடி கண்டு ஶ்ரீலங்கா அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஶ்ரீலங்காவுக்கான கனேடிய தூதர் இசபெல் கத்ரீன் மார்ட்டினிடம் இலங்கையில் பிரிவினைவாத கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களை அங்கீகரித்தல் மற்றும் இலங்கையில் உள்ள இன சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முற்படும் செயற்பாடுகள் ஆகியவற்றைத் தடுப்பதற்கான அவசியத்தை கனடிய அரசாங்கத்திற்கு எடுத்துரைக்குமாறு ஶ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரம்டன் நகரத்தின் தமிழீழக் கொடி அங்கீகாரம் என்பது கனடாவின் மத்திய அரசாங்கம் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்துள்ள நிலையில், ஒரு மாறுபட்ட அரசியல் செய்தியை வழங்குகிறது.

புலிகள் இயக்கம்மீதான தடையை விலத்த வலியுறத்துவதுடன் இது தமிழ் தேசிய இனத்தின் கலாச்சார மற்றும் தேசிய அடையாளத்தின் சின்னம் என்ற புரிதலை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

அரச அலுவலகங்களின் அறிவிப்புக்கள் குறித்து கட்டாயமாகும் சட்டம்

அரச அலுவலகங்களின் அறிவிப்புக்கள் குறித்து கட்டாயமாகும் சட்டம்

யாழில் இடி மின்னல் தாக்கத்தால் சேதமடைந்த தேவாலயம்!

யாழில் இடி மின்னல் தாக்கத்தால் சேதமடைந்த தேவாலயம்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, மாதகல், முத்தையன்கட்டு, Markham, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ் ஓட்டுமடம், கிளிநொச்சி, Brampton, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், வேலணை 4ம் வட்டாரம், Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், London, United Kingdom

08 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, வெள்ளவத்தை

04 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், நோர்வே, Norway

05 Dec, 2015
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, துணுக்காய், சென்னை, India

05 Dec, 2025
மரண அறிவித்தல்

கைதடி தெற்கு, கொழும்பு

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இயக்கச்சி

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், St. Gallen, Switzerland

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, கொழும்பு, வவுனியா, Southall, United Kingdom, East Ham, United Kingdom

30 Nov, 2025
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
மரண அறிவித்தல்

நொச்சிமோட்டை, வைரவபுளியங்குளம்

02 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Croydon, United Kingdom

07 Dec, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, பிரித்தானியா, United Kingdom

21 Nov, 2025