கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
கொழும்பில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு மாநகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் ருவான் விஜேமுனி(Doctor Ruwan wijayamuni) தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களில் கொழும்பில் கோவிட் மரணங்கள் பதிவாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கோவிட் தொற்று உறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை சராசரியாக ஐந்து என்ற எண்ணிக்கையில் காணப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாள் தோறும் 220 பீ.சீ.ஆர் பரிசோதனைகளும் 300 அன்டிஜன் பரிசோதனைகளும் ஆறு நிலையங்களில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை எண்ணிக்கையில் 1 முதல் 2 வீதமான நோய் தொற்று உறுதியாளர்கள் பதிவாகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறினால் மீண்டும் நோய்த் தொற்று தலைதூக்கும் அபாயம் காணப்படுகின்றது டொக்டர் விஜேமுனி தெரிவித்துள்ளார்.