யாழ். நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
By Vanan
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி - கஸ்தூரியார் வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சற்றுமுன் குழப்ப நிலை ஏற்பட்டது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோசடிகள், முறைகேடுகள், குழப்பங்கள் இன்றி விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக காவல்துறையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் காவல்துறையினருக்கு முன்பாகவே , பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவித்தலை மீறி குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 20 லீட்டர் கொள்வனவு உடைய கொள்கலன்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு எரிபொருள் விநியோகித்தவர்கள், நீண்ட நேரமாக மோட்டார் சைக்கிள்களில் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு 500 ரூபாய்க்கு மாத்திரமே பெற்றோல் விநியோகிக்க முடியும் என அறிவித்தமையால் குழப்ப நிலை ஏற்பட்டது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி