காலிறுதியை தம்வசமாகிய ஐரோப்பிய அமெரிக்கா நாடுகள் - நெகிழ்ச்சியூட்டிய பீலேவின் புகைப்படம்
கத்தார் 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தின் கால் இறுதிப் போட்டிக்கு குரோஷியா தகுதி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற 16 அணிகள் சுற்றின் போட்டியில் ஜப்பானை பெனல்டி முறையில் 3:1 கோல்கள் விகிதத்தில் குரோஷியா வென்றது.
கத்தாரின் அல்-வக்ராஹ் நகரிலுள்ள அல் ஜானோப் அரங்கில் இப்போட்டி நடைபெற்றது. 43ஆவது நிமிடத்தில் ஜப்பானிய வீரர் டைசன் மயீடா கோல் புகுத்தினார். இடைவேளையின்போது ஜப்பானிய அணி 1:0 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது.
பெனல்டி வாய்ப்பு
அதன்பின் 55 வேது நிமிடத்தில் குரோஷியாவின் ஐவன் பேரிசிக் புகுத்திய கோல் மூலம் 1:1 என புள்ளிப்பட்டியல் சமனானது.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்ட நேரம் முடிந்ததை அடுத்து மேலதிக உதை ஈடு நேரத்தின்(+5) முடிவிலும் இரு அணிகளும் 1:1 கோல் விகிதத்தில் சமநிலையில் இருந்தன.
இது இச்சுற்றுப்போட்டியில் முதல் தடவையாக மேலதிக நேர ஆட்டத்துக்கு வழிவகுத்தது.
ஆனால், 30 நிமிட மேலதிக நேர ஆட்டத்தில் கோல் எதுவும் புகுத்தப்படாததால் ஆட்டம் 1:1 கோல் விகிதத்தில் சமநிலையில் முடிவடைந்தது.
அதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 5 பெனல்டி வாய்ப்புகள் வழங்ககப்பட்டன.
இதில் 3:1 அணி கோல் விகிதத்தில் குரோஷியா வெற்றிபெற்று கால் இறுதிக்கு தகுதிபெற்றது.
பிரேசில் அதிரடி
கத்தாரில் நடைபெறும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று(6) இடம்பெற்ற போட்டியில் பிரேசில், தென் கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த ஆட்டம் தோகாவிலுள்ள ஸ்டேடிடம் 974-ல் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது. காயத்தால் ஓய்வில் இருந்த பிரேசில் அணியின் தலைவர் மற்றும் நட்சத்திர வீரர் நெய்மர் இப்போட்டியில் களம் கண்டார்.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே பிரேசில் அதிரடியை கையாண்டது. முதல் கோலை வினி ஜூனியர் புகுத்தினார். 13வது நிமிடத்தில் நெய்மர் தன் பங்கிற்கு ஒரு கோல் புகுத்தினார்.
இதன்பின் பிரேசில் வீரர்கள் ரிச்சர்லிசன் 29-வது நிமிடத்திலும், லூகாஸ் பகியூடா 39வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் புகுத்த முதல் பாதியில் பிரேசில் 4 - 0 என்று முன்னிலை வகித்தது.
பிரேசில் வெற்றி
இரண்டாம் பாதியில் பிரேசில் அணியால் கோல் புகுத்த முடியவில்லை. அதேநேரம், தென் கொரியாவின் 76-வது நிமிடத்தில் பெய்க் சியூங் ஒரு கோல் புகுத்தினார்.
என்றாலும் ஆட்ட நேர முடிவில், பிரேசில் அணி 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
பீலே
Em 1958, eu caminhava pelas ruas pensando em cumprir a promessa que fiz ao meu pai. Sei que hoje muitos fizeram promessas parecidas e também vão em busca da sua primeira Copa do Mundo.
— Pelé (@Pele) December 5, 2022
Assistirei ao jogo do hospital e estarei torcendo muito por cada um de vocês. Boa sorte! 🇧🇷 pic.twitter.com/3CRI8v6H55
பிரேசிலின் கால்பந்து ஜாம்பனான பீலே நேற்றைய போட்டியில் நினைவுகூறப்பட்டார். பீலேவின் உடல்நிலை தொடர்பாக பல ஊடக அறிக்கைகளில் வெளிவந்த நிலையில் அவரை நினைவுகூறும் முகமாக வீரர்களும் ரசிகர்களும் அவரின் புகைப்படத்தை காண்பித்தனர்.
82 வயதான அவர் புற்றுநோய் மற்றும் COVID-19 உட்பட, நுரையீரல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் நேற்றைய பிரேசிலின் போட்டிக்கு முன் அவரது டுவிட்டர் கணக்கில் இருந்து ஒரு டுவீட் வந்தள்ளது. அதில் “தனது மருத்துவமனை படுக்கையில் இருந்து தென் கொரியா அணி போட்டியை பார்த்துக் கொண்டிருப்பேன்”என தெரிவித்திருந்தார்.
