பொருத்தமான நபர் வரும்வரை காத்திருங்கள் -கோட்டாபய அறிவுறுத்து
gotabaya
Dr. Prasanna Gunasena
retierment
By Sumithiran
பொருத்தமான நபர் ஒருவர் கிடைக்கும் வரை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் பிரசன்ன குணசேனவை(Dr. Prasanna Gunasena) இன்னும் ஒரு மாதம் பதவியில் இருக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (gotabaya rajapaksha)அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டொக்டர் குணசேன முன்பு எழுத்துபூர்வமாக ஓய்வு பெறுவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். ஜனாதிபதியும் அவர் பதவியில் இருந்து விலக ஒப்புக்கொண்டார்.
எனினும்,பொருத்தமான ஒரு மாற்று இடம் கிடைக்கும் வரை இன்னும் ஒரு மாதம் காத்திருக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டொக்டர் குணசேன இன்று காலை ஜனாதிபதி தலைமையில் நடந்த கொவிட் பணிக்குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி