பல்டியடிக்க தயாராகும் அரசாங்கம் - அதிகரிக்கவுள்ள அரிசிவிலை
அரிசி விலையை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அரிசி ஆலை உரிமையாளர்களின் வற்புறுத்தலை அடுத்தே அரிசி விலை குறித்து அரசாங்கம் வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக தெரிய வருகிறது.
இதுகுறித்து கூட்டுறவு சேவை, விற்பனை முகாமைத்துவம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
சம்பா அரிசி ஒரு கிலோ 103வில் இருந்து 120 ரூபாவாகவும் கீரி சம்பா 125 ரூபாவில் இருந்து 145 ரூபாவாகவும் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் நாடு அரிசியின் விலையில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. அரிசிக்கு விலை கட்டுப்பாடு நிர்ணயித்த பின்னர் சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
விலை உயர்வு கோரி அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசி ஆலைகளை மூடியுள்ளதுடன் அரிசி உற்பத்தியையும் நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.