சிறிலங்கா தொடர்பில் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டில்!
இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள, அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என சிறிலங்கா அரசாங்கத்திற்கு உறுதியளித்துள்ளது.
தற்போது அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை, அமெரிக்காவின் துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றையும் இட்டுள்ளார்.
Thank you 🇱🇰 @MFA_SriLanka Foreign Minister Sabry for our meeting at #UNGA. The United States will continue to support Sri Lanka through its economic crisis, and we will work together to support a free and prosperous region. pic.twitter.com/ILx96FGlXV
— Under Secretary Victoria Nuland (@UnderSecStateP) September 21, 2022
அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதியளித்துள்ளார்.
சிறிலங்காவிற்கு அமெரிக்கா உறுதியளிப்பு
அத்துடன் சுதந்திரமான மற்றும் வளமான பிராந்தியத்திற்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றும் அமெரிக்காவின் துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.