தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டு விவகாரம்! ஓய்வு பெற்ற வைத்தியரின் வீட்டில் மீட்கப்பட்ட பெரும் தொகை ஆயுதங்கள்
Police
Galle
SriLanka
Embilipitiya
Poralai
Panamura
All Saints' Church
By Chanakyan
பொரளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் (All Saints' Church) கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி நான்கு கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர், இரண்டு வாள்கள், ஒரு ரம்போ கத்தி மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய - பனாமுர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட நீண்ட விசாரணைகளின் போது குறித்த வைத்தியர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து சந்தேக நபரான வைத்தியர் பிலியந்தலை பகுதியில் வைத்து காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி