கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களை தொற்றிய ஒமிக்ரோன் - உலகம் முழுவதும் பரவும் அபாயம்!
South Africa
Australia
Corona vaccine
Omicron
By MKkamshan
தென்னாப்பிரிக்காவில் இருந்து சிட்னிக்கு வந்த இரண்டு வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய ஒமிக்ரோன் வைரஸ் மாறுபாட்டால் இரண்டு பேர் அவுஸ்திரேலியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் தென் ஆபிரிக்காவில் இருந்து தோஹா ஊடாக நேற்று அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.
இந்த தொற்றாளர்களுக்கு நடத்தப்பட்ட அவசர கொரோனா பரிசோதனையில் இவர்களுக்கு புதிய ஒமிக்ரோன் திரிபு தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக சிட்னி பிராந்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் என்பதுடன் இவர்களிடன் தென் ஆபிரிக்காவில் இருந்து மேலும் 12 பேர் அவுஸ்திரேலியா சென்றுள்ளனர்.
இவர்கள் பயணம் செய்த விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என 260 பேர் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி