இலங்கைச் செலவில் பிரிட்டனில் அகதி தஞ்சம்!
இலங்கையர்கள் அல்லது இலங்கை குறித்த விடயங்கள் அனைத்துலக ஊடகங்களில் தினசரி இடம்பிடித்துக் கொள்கின்றது.
அந்த வகையில் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான “ஆசியானில்” பேசப்பட்ட விடயங்கள் சரி, இல்லை என்றால் பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் நகரில் இடம்பெற்றுவரும் “22ஆவது பொது நலவாய விளையாட்டு நிகழ்வுக்காக” அரச செலவீனத்தில் சென்று அகதி தஞ்சம் கோரிக்கொள்ள, தலைமறைவாகும் சிங்களவர்கள் குறித்த விடயங்கள் சரி பரபரப்பாக பேசப்படுகிறது.
சிங்களவர்கள் அகதி தஞ்சம்
22 ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றுவதற்காக 161 இலங்கையர்கள் பிரித்தானியா சென்று தங்கியுள்ள நிலையில், இதுவரை ஒரு பயிற்சியாளர் உட்பட மூன்று சிங்களவர்கள் அகதி தஞ்சம் கோரிக் கொள்ளும் வகையில் தலைமறைவாகியுள்ளனர்.
இதனையடுத்து ஏனைய வீரர்கள் மற்றும் பயிற்சிவிப்பாளர்களது கடவுச்சீட்டுகளை பர்மிங்ஹாம் காவல்துறை கையகப்படுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டி- இலங்கையர் இருவர் மாயம் |
இதன் விரிவான மற்றும் பல இலங்கை, இந்திய, உலகச் செய்திகளை இன்றைய செய்தி வீச்சில் காணலாம்,