உக்ரைனிடம் சரணடைந்த ரஸ்ய வீரர்கள்..! வெளியான காணொளி: அதிர்ச்சியில் உறைந்துபோன புடின்
உக்ரைனின் நான்கு நகரங்களை ரஸ்யாவுடன் இணைத்துவிட்டதாக புடின் (Vladimir Putin) அறிவித்திருக்கும் நிலையில், அவரது படைவீரர்கள் அவருக்கு மேலும் ஒரு தலைக்குனிவை ஏற்படுத்தும் செயலைச் செய்துள்ளார்கள்.
ரஸ்ய அதிபராகயாகிய புடின் (Vladimir Putin), உக்ரைனிலுள்ள Donetsk, Luhansk, Kherson மற்றும் Zaporizhzhia ஆகிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்.
ஆனால், அவரது படைவீரர்களோ வெள்ளைக் கொடியுடன் உக்ரைன் வீரர்களிடம் சரணடைந்து கொண்டிருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் வீரர்களிடம் சரண்
சமீபத்தில், Kherson பகுதிக்கு அருகிலேயே, இராணுவ வாகனம் ஒன்றில் வந்த ரஸ்யப் படையினர் சிலர், வெள்ளைக்கொடியுடன் உக்ரைன் வீரர்களிடம் சரணடையும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
உக்ரைன் வீரர்களை நோக்கி வந்த அந்த ரஸ்ய இராணுவ வாகனத்திலிருந்து கைகளை உயர்த்தியபடி வெளியே வரும் ரஸ்யப் படையினர் உக்ரைன் வீரர்களிடம் சரணடைவதைக் காணலாம்.
இந்நிலையில், ஏற்கனவே அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ரஷ்ய ரயில் ஒன்று உக்ரைனை நோக்கி வரும் காட்சிகளும், அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று ஆர்டிக் சமுத்திரத்தில் நிற்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
சரணடையும் காட்சி
Russian surrender of an BMP. Should be sent to all Russian soldiers as a text example how to get out of this war alive. #Kherson #Ukraine pic.twitter.com/RKikmlXA8Q
— (((Tendar))) (@Tendar) October 5, 2022
இப்படி ரஸ்யாவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் ரஸ்யப் படையினர் சரணடைந்து வருவதுடன், உக்ரைன் படைகளும் வேகமாக முன்னேறி வருவதால், எச்சரிக்கை விடுக்கும் வகையில் எல்லையில் புடின் (Vladimir Putin) அணு ஆயுதம் ஒன்றை வெடிக்கச் செய்யக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.