தேனி வளர்ப்பினால் கிடைத்த அதிர்ஷ்டம்..! கோடீஸ்வராகிய தம்பதியினர்
தனது மனைவியுடன் சேர்ந்து தேன் வளர்ப்பு தொழிலை செய்து தேன் விற்பனை மூலம் குடும்பஸ்தர் ஒருவர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
தனியார் நிறுவனத்தில் மேலாளராக ஹிமான்ஷு என்பவர் வேலை பார்த்தார்.அவரது மனைவி தன்வி என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்தார்.
ஒரு கட்டத்தில் இருவருக்குமே தாங்கள் செய்து வரும் வேலை பிடிக்காத நிலையில் சொந்த தொழிலில் ஈடுபட முடிவு செய்தனர்.
இந்நிலையில், தேன் வளர்ப்பது எப்படி என்பது குறித்து கிருஷி விக்யான் கேந்திரா அமைப்பிடம் கற்றனர்.
மாத வருமானம்
பின்னர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் குறித்த தம்பதியினர் தேன் பண்ணை அமைத்தனர்.
ஆரம்பத்தில் குறைவான அளவே தேன் தயாரித்த இந்த தம்பதிகள் படிப்படியாக தங்கள் தொழிலை வளர்த்து இன்று மிகப் பெரிய அளவில் தேன் தொழிலை செய்து வருகின்றனர்.
இந்த தம்பதிகள் தற்போது ஒவ்வொரு மாதமும் சுமார் 300 கிலோ தேன் விற்பனை செய்து வருகின்றதுடன் சராசரியாக ஒரு மாதத்திற்கு 9 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை இலாபம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் இந்த தம்பதிக்கு ஆண்டுக்கு ரூ.1.4 கோடி ஒரு வருடத்திற்கு இலாபம் கிடைப்பதாக தெரிகிறது.