நாட்டில் உச்சம் தொடும் துவிச்சக்கர வண்டிகளின் விலை!
நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாகவும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாகவும் மக்கள் மத்தியில் துவிச்சக்கர வண்டிகளின் பாவனைகள் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, துவிச்சக்கர வண்டி மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவிச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக, மக்கள் துவிச்சக்கர வண்டி விற்பனை நிலையங்களை அதிகளவில் நாடிச்செல்கின்றனர்.
சடுதியாக அதிகரித்த விலை
துவிச்சக்கரவண்டி கொள்வனவு அதிகரித்துள்ள நிலையில், அதன் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது.
சாதாரண துவிச்சக்கரவண்டி ஒன்றின் விலை, 50 ஆயிரம் ரூபாயைக் கடந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், புதிய வடிவிலான மற்றும் வெவ்வேறு தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட சைக்கிள், ஒரு இலட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றனது.
அதேநேரம், சைக்கிள் உதிரிப்பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.