அதிகரிக்கும் இணையதள நிதி மோசடிகள்...! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்று வரும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை இலங்கை காவல்துறை விடுத்துள்ளது.
டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் பல்வேறு இணையத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசேட அறிவுறுத்தல்கள்
இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவோரைக் கைது செய்யும் நோக்கில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் காவல்துறை மா அதிபரால் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடிகள் தொடர்பான தகவல்களைக் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் 011 2300 756 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் எனக் காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 071 859 2918 மற்றும் 071 859 1765 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் மூலமும் தகவல்களை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர, குற்றவியல் விசாரணைத் திணைக்கள அலுவலகத்திற்கு நேரில் சென்று எழுத்துமூல முறைப்பாடுகளையும் சமர்ப்பிக்க முடியும் எனக் காவல்துறையினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |