ஒமிக்ரோன் தொற்றுள்ள நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்தனரா?
srilanka
tourist
countries
Omicron
By Sumithiran
ஒமிக்ரோன்(Omicron ) தொற்றுக்குள்ளான நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் சுற்றுலாப்பயணிகள் எவரும் இலங்கைக்கு வருகை தரவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, தென்னாபிரிக்கா, நமீபியா, பொட்ஸ்வானா, சிம்பாப்வே, லெசதோ மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து எவரும் நாட்டுக்கு வருகைத் தரவில்லை என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தவிர்ந்த வேறு எவரேனும் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்களா என்பதைக் கண்டறிய சுகாதார தரப்பினரால் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி