துருக்கியை உலுக்கிய பேரழிவு - இலங்கையர்களுக்கு அவசர தகவல்
துருக்கியில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க மக்களிடம் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறான தகவல்களை இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு அல்லது துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
4000 உயிரிழப்பு
துருக்கி மற்றும் சிரியாவில் நேற்றைய தினம் பதிவான பாரிய நிலநடுக்கத்தால் இதுவரையில் 4000ஐ தாண்டிய உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
அதேவேளை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டில் துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவு இது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.