துருக்கிய நில நடுக்கம் - சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகள்!
துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து மூன்றுமுறை ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், பலர் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
பல கட்டிடங்கள், வீடுகள் தரைமட்டமாகியுள்ளதுடன், மீண்டும் நில நடுக்கம் ஏற்படலாம் எனும் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
குறித்த சூழ்நிலையை சிரியா சிறையில் இருந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனர்.
தப்பியோடிய ஐஎஸ் பயங்கரவாதிகள்
துருக்கிய எல்லையில் உள்ள ரஜோ நகர சிறையில் 1300 ஐஎஸ் பயங்கரவாதிகள் உட்பட 2000 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த துயரத்தின் மத்தியிலும், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்களில் 20 ஐஎஸ் பயங்கரவாதிகள் தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிரியா மற்றும் துருக்கியில் மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தப்பி ஓடிய குறித்த ஐஎஸ் பயங்கரவாதிகளும் தேடப்பட்டு வருகின்றனர்.