பொது மக்களிடம் சிறிலங்கா காவல்துறை விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!!
விடுமுறையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மக்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை கண்காணிப்பதற்காக மேல் மாகாண எல்லைகள் 13 இலும் 115 பொலிஸ் உத்தியோகத்தர்களும், 81 இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், விடுமுறை தினங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் ஒன்றுக்கூடும் நிகழ்வுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எதிர்வரும் வாரங்கள் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான தயார்படுத்தல்கள் இடம்பெறும் வாரங்கள் ஆகும்.
எனவே தற்போதைய விடுமுறை காலத்தில் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருடன் போக்குவரத்துக்களை மேற்கொண்டால் பாடசாலைகளை ஆரம்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே விடுமுறை நாட்களில் எங்கும் செல்லாது வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.