நாடொன்றின் மீது படையெடுக்க தயாராகும் அமெரிக்க படைகள் : ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடி உத்தரவு
நைஜீரியாவில் இஸ்லாமிய தீவிரவாதிகளை அழிக்க இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தீவிரவாதக் குழுக்கள் நைஜீரியாவில் கிறிஸ்தவர்களைக் கொன்று அவர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து வருவதாகவும், ஆனால் நைஜீரிய அரசாங்கம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
விரைவாக நடவடிக்கை எடுப்பது நல்லது
அமெரிக்க தாக்குதல்கள் விரைவாகவும் கடுமையாகவும் மாறுவதற்கு முன்பு நைஜீரிய அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுப்பது நல்லது என்று ட்ரம்ப் தனது ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவில் கூறியுள்ளார்.

நைஜீரியாவிற்கான அனைத்து அமெரிக்க உதவிகளும் நிறுத்தப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்
பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தும் இந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு பதிலளித்தார்.

நைஜீரியாவில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்களால் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 8 மணி நேரம் முன்