24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம்...! கடல் கொந்தளிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
Department of Meteorology
Climate Change
Weather
Rain
By Thulsi
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்த வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் (Department of Meteorology) இன்று (19.07.2025) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழில் நடவடிக்கைகளிலும் கடல் வழிப் போக்குவரத்திலும் ஈடுபட வேண்டாம் எனவும் கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
காற்றின் வேகம்
காற்றின் வேகம் மணிக்கு 60 - 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
புத்தளம் முதல் கொழும்பு காலி மற்றும் ஹம்பாந் தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கரையோரங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் கவனமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி