பல வருடங்களாக முன்னாள் அமைச்சரால் சூறையாடப்பட்ட யாழ். திக்கம் வடிசாலை !

Jaffna Sri Lanka Sri Lankan Peoples
By Shalini Balachandran Nov 19, 2024 05:05 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி திக்கம் வடிசாலை கடந்த பத்து வருடங்களாக முன்னாள் அமைச்சர் ஒருவரால் சூறையாடப்பட்டுள்ளதுடன் இங்கு நடைபெற்ற அனைத்து மோசடிகளும் விசாரிக்கப்படும் என பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் வி.சகாதேவன் (V. Sakadevan) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அங்கு பணிபுரிந்த முன்னாள் களஞ்சியசாலை காப்பாளர் துப்பாக்கி முனையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வவுனியாவிற்கு நேற்றையதினம் (18) விஜயம் செய்த வி.சகாதேவன், நகரப் பகுதியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையின் கீழ் உள்ள கற்பகம் பனை உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தை பார்வையிட்டிருந்தார். 

இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  

2024 க.பொ.த.உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

2024 க.பொ.த.உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

பல்வேறு குறைபாடுகள்

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தலைவராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றேன்.

கடந்த காலங்களில் பனை வளம் சார்ந்த விடயங்களை பாதுகாப்பதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டு்ள்ளது.

பனை உற்பத்திசார் தொழிலாளர்களுக்கு உயர்ந்த வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் சூழ்நிலையில் சபை இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் நிலவுகின்றது.

பல வருடங்களாக முன்னாள் அமைச்சரால் சூறையாடப்பட்ட யாழ். திக்கம் வடிசாலை ! | 100 Million Money Transfer Ex Minister Forgery

திக்கம் வடிசாலை கடந்த பத்து வருடங்களாக முன்னாள் அமைச்சர் ஒருவரால் சூறையாடப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிந்த முன்னாள் களஞ்சியசாலை காப்பாளர் ஒருவர் முறைப்பாடு ஒன்றை எனக்கு வழங்கியுள்ளார்.

தான் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டு தனது வேலையில் இருந்து விலக்கப்பட்டதாகவும், இன்று வரை நீதி கிடைக்கவில்லை என்றும், தான் உயிரை மாய்க்கும் நிலைக்கு சென்றதாக அவர் தெரிவித்திருந்தார்.

அவரது அதிகாரப் பிடியில் பனை அபிவிருத்திசபை மட்டுமல்ல வடக்கு மாகாணமும் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த நிலையில் இந்த நியமனத்தின் மூலம் தமக்கு நடந்த அநியாயங்களை வெளிக்கொண்டு வர பலர் துணிந்திருக்கிறார்கள்.

இடியுடன் கூடிய கனமழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இடியுடன் கூடிய கனமழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பனை அபிவிருத்தி சபை

இலங்கையின் மிகப்பெரிய மது உற்பத்தி நிறுவனத்திடம் அந்த தொழிற்சாலை கையளிக்கப்பட்டுள்ளது, பனஞ்சாராய உற்பத்தி ஒன்றும் அங்கு நடந்தது.

ஆனால் இது பற்றிய எந்த தகவலும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. நான் சபையை பொறுப்பெடுத்த பின்னரே அந்த ஒப்பந்தத்தின் பிரதி பனை அபிவிருத்தி சபைக்கே கிடைத்தது.

முதல்தகவல் அறிக்கையின் பிரகாரம் கிட்டத்தட்ட 100 மில்லியன் ரூபாய் நேரடியான பணப்பரிமாற்றம் அந்த இடத்தை கைப்பற்றுவதற்காக நடந்திருப்பதாக அறியமுடிகின்றது.

பல வருடங்களாக முன்னாள் அமைச்சரால் சூறையாடப்பட்ட யாழ். திக்கம் வடிசாலை ! | 100 Million Money Transfer Ex Minister Forgery

அதனைவிட 2014ஆம் ஆண்டு சபையின் அன்றைய முன்னாள் தலைவரின் அறிக்கையின்படி 69 மில்லியன் பெறுமதியான மதுசாரம் ஆயுத முனையில் கொள்ளையடிக்கப்பட்டாக கூறியிருக்கிறார்.

அங்கு நடைபெற்ற கொள்ளைகள் முறைகேடுகள் மிக அதிகமானவை இப்போது ஒவ்வொன்றாக வெளிவருகின்றது, சாட்சியங்களை சேகரித்து வருகின்றோம்.

இந்த விசாரணைகளில் யாரும் தப்ப முடியாது. இந்த தொழிலை மீள கட்டுவது சவாலான ஒரு விடயமாக மாறியிருக்கிறது, வடிசாலைகள் தென் இலங்கையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு குருநாகல் புத்தளம் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் தென்னங் கள்ளு இங்கு விற்பனை செய்யப்படுகின்றது.

நெடுந்தீவுக்கும் தென்னங்கள்ளை விற்பனை செய்யும் நிலமை ஏற்ப்பட்டிருக்கிறது, பனைவளம் இருந்தும் அரசியல்வாதிகளின் ஊழல் நிறைந்த செயற்பாட்டால் இந்த தொழில் அழிந்து போயுள்ளது.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளும் வெட்டு!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளும் வெட்டு!

சட்டவிரோதமாக உற்பத்தி

நெடுந்தீவில் பிரதேசசெயலாளர் ஒருவரால் சட்டவிரோதமாக கள் உற்பத்தி நிலையம் நடாத்தப்பட்டு தென் இலங்கைக்கு விற்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல முறைப்பாடுகள் கிடைக்கிறது. பனை வளத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நான் எடுத்துள்ளேன்.

பொதுமக்களும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் அத்துடன் 11 மாவட்டங்களில் பனைவளம் உள்ளது எனவே முழுமையான கணக்கெடுப்பொன்றை செய்ய இருக்கிறோம்.

அதன் பின்னரே அவற்றை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதா என்ற விடயத்தை ஆராயவுள்ளோம். பனை மீள் நடுகையின் போது நடந்த மோசடிகளால் நிதி அமைச்சு அதனை இடைநிறுத்தியிருக்கிறது.

பல வருடங்களாக முன்னாள் அமைச்சரால் சூறையாடப்பட்ட யாழ். திக்கம் வடிசாலை ! | 100 Million Money Transfer Ex Minister Forgery

பனை அபிவிருத்திச்சபை தமது சட்டதிட்டங்களுக்கு அமைவாக செயற்படாத காரணத்தால் அரசாங்கம் அந்த செயற்பாட்டை இடைநிறுத்தியிருந்தது.

அதனை மீள செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பனஞ் சாராயத்தினை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிகமான வருமானத்தை பெறமுடியும்.

அதற்கான அனுமதியை எமது சபையே வழங்கும் தனியாக எவரும் செய்யமுடியாது ஒருசில ஊழல்வாதிகள் மற்றும் மதுவரித்திணைக்கள அதிகாரிகள் லஞ்ச மோசடியில் ஈடுபட்டு புதியவர்கள் இந்த தொழிலுக்கு வரவிடாமல் தடுத்துள்ளனர்.

அவ்வாறான ஒரு விடயத்திற்காக 15 மில்லியன் பணம் வழங்கப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஏற்றுமதியில் ஈடுபடுவதற்கு பலர் விண்ணப்பித்துள்ளனர் அதற்கான கூட்டம் விரைவில் நடக்க உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லாவிற்கு விடுதலையே கிடையாது: நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பு

ஹிஸ்புல்லாவிற்கு விடுதலையே கிடையாது: நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                    
ReeCha
மரண அறிவித்தல்

மூதூர், காந்திநகர்

15 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, நீர்கொழும்பு

16 Apr, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்