பதிமூன்றாம் திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் : கிளிநொச்சியில் உறுதியளித்த சஜித்
ஏனையவர்களைப் போன்று அல்லாது நேர்படப் பேசும் பழக்கமுடைய தாம் 13 ஆம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சிங்களம், தமிழ், முஸ்லிம் மற்றும் பேர்கர் ஆகிய எந்த இனமாக இருந்தாலும் ஒரு தாய் பிள்ளைகள் போன்று நாட்டை கட்டியெழுப்புவதற்கு கைகோர்க்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயத்தை கிளிநொச்சியில் நேற்றைய தினம் (09) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சந்தர்ப்பவாதிகள்
அத்தோடு, 13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் பேசுவதற்கு பல தலைவர்கள் அஞ்சுவதாகவும் மற்றும் எதிர்கால தமது அரசாங்கத்தில் 13 முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறானவர்கள் அரசியல் சந்தர்ப்பவாதிகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)