நல்லூரில் கண்ணீரை வரவழைத்த தண்ணீரின் கதை நாடகம்

Sri Lankan Tamils Tamils Nallur Kandaswamy Kovil
By Shalini Balachandran Aug 19, 2025 10:00 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

செம்முகம் ஆற்றுகைக் குழுவின் “தண்ணீரின் கதை” நாடக ஆற்றுகை நல்லூரில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நாடக ஆற்றுகை நேற்றைய தினம் (18) இடம்பெற்றுள்ளது.

நல்லூர் முருகன் ஆலய திருவிழாவை முன்னிட்டு “நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி” எனும் தொனிப் பொருளில் வடக்கின் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த (WASPAR & Young Water Professionals) முயற்சியில் வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் இரண்டாவது நீர்வளக் கண்காட்சி இடம்பெற்று வருகின்றது.

தெல்லிப்பழை வைத்தியசாலை மோசடி விவகாரம்: அர்ச்சுனா எம்.பி கேள்வி

தெல்லிப்பழை வைத்தியசாலை மோசடி விவகாரம்: அர்ச்சுனா எம்.பி கேள்வி

கதை நாடகம்

குறித்த கண்காட்சியானது கடந்த வெள்ளிக்கிழமை (15) மாலை நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பமான நிலையில் தொடர்ந்து வரும் 24 ஆம் திகதி வரை வரை இடம்பெறவுள்ளது.

நல்லூரில் கண்ணீரை வரவழைத்த தண்ணீரின் கதை நாடகம் | A Play Performed At A Festival In Nallur

நீர்வள சபை, நீர்ப்பாசண திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ் இந்துக்கல்லூரி மற்றும் பல தன்னார்வலர் அமைப்புகளின் கூட்டு முயற்சியாக இந்த கண்காட்சி இடம்பெறுகின்றது.

மகிந்தவின் வீட்டுக்கு முன்னால் திரண்ட பொதுமக்கள்!

மகிந்தவின் வீட்டுக்கு முன்னால் திரண்ட பொதுமக்கள்!

தண்ணீரின் கதை

நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் பல்வேறு ஆற்றுகை நிகழ்வுகளும், கலந்துரையாடல்களும் தினமும் மாலை வேளையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நல்லூரில் கண்ணீரை வரவழைத்த தண்ணீரின் கதை நாடகம் | A Play Performed At A Festival In Nallur

அந்த வகையில் நேற்றைய தினம் (18) திங்கட்கிழமை மாலை செம்முகம் ஆற்றுகைக் குழுவின் “தண்ணீரின் கதை” நாடக ஆற்றுகை இடம்பெற்றது.

நிலத்தடி நீரை மட்டும் நம்பியிருக்கும் யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் தண்ணீர் இல்லாமல் போனால் என்னவாகும் என்பதனை சித்தரிக்கும் வகையில் நாடகம் உயிர்ப்புள்ளதாக நாடகம் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் உள்ள இலங்கை ஏதிலிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள இலங்கை ஏதிலிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

அனுபவ பகிர்வு

பார்வையாளர்களை கண்ணீரில் நனைய வைத்த நாடகத்தின் பின் பலரது அனுபவ பகிர்வுகளும் உருக்கமாக அமைந்திருந்தன.

நல்லூரில் கண்ணீரை வரவழைத்த தண்ணீரின் கதை நாடகம் | A Play Performed At A Festival In Nallur

நீர்வளக் கண்காட்சியின் ஐந்தாம் நாளான இன்று (19) செவ்வாய்க்கிழமை ஆற்றுகை நிகழ்வாக பாடல் நிகழ்வுகளும் “கேணி: நீர் மரபுரிமைக் கட்டுமானங்களைக் காக்க வேண்டிச் சில முன்வைப்புகள்” என்கிற தலைப்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் மற்றும் ஆய்வாளருமான அகிலன் பாக்கியநாதனின் கருத்துரையும் மற்றும் உரையாடலும் இடம்பெறவுள்ளது.

நிலத்தடி நீரும் எமது பிரதேச நிலக்கட்டமைப்பு மற்றும் வழுக்கையாறு திட்ட மாதிரிகளின் கண்காட்சிகள், விஞ்ஞான விளக்கங்கள், ஆய்வு முடிவுகள், விளையாட்டுகள், புதிர்ப்போட்டிகளில் பங்கேற்கும் சிறார்களுக்கான ஏராளமான பரிசுப் பொருட்களுடன் நிலத்தடி நீரை பக்குவமாக பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கை இக்கண்காட்சி ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் உள்ள இலங்கை ஏதிலிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள இலங்கை ஏதிலிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025