மின்சாரம் தாக்கி 17வயது மாணவன் பரிதாப மரணம்
அனுராதபுரம் (Anuradhapura) பகுதியில் மின்சாரம் தாக்கி 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் அனுராதபுர - கல்கிரியாகம திக்வண்ணகம பிரதேசத்தில் நேற்றைய (25) தினம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் தனது வீட்டுத் தோட்டத்திற்கு வரும் குரங்குகளை விரட்டுவதற்காக தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த வானொலிப் பெட்டியில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நோயாளர் காவு வண்டி
ஆபத்தான நிலையில் இருந்த மாணவனை தம்புள்ளை (Dambulla) வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்த போதிலும், அவ்வேளையில் நோயாளர் காவு வண்டி இல்லாததாலும், மற்றுமொரு வண்டி கிடைக்காததாலும், அதே வைத்தியசாலையில் சிகிச்சை வழங்க வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பலமணிநேர சிகிச்சையின் பின்னர் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 6 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)