நாட்டிற்கான ஒரே மாற்று சக்தி நாமே - மார்தட்டும் சஜித்
நாட்டிற்கான ஒரே தீர்வும் மாற்றும் ஐக்கிய மக்கள் சக்தியே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
"வெற்றிக்கான பயணம்" எனும் கருப்பொருளில் மொனராகலை தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் இன்று (7) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாற்று வழி
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “நாட்டை அழித்த ராஜபக்ச தலைமையிலான மொட்டு அரசாங்கத்திற்கு மாற்று வழியை நாட்டு மக்கள் தேடும் போது, ராஜபக்சர்களையும் திருடர்களையும் பாதுகாக்கும் அரசாங்கத்திற்கு எதிராக மாற்று வழி தேடும் போது அந்த மாற்று நாட்டில் திருட்டு, கொலைகளை செய்யாத மாற்றாக இருக்க வேண்டும்.
இந்த நாட்டின் 75 ஆண்டுகால ஜனநாயக வரலாற்றில், எதிர்க்கட்சிகள் தொகுதி வாரியாக தம்மை ஒருங்கிணைத்து எவ்வாறெனினும் அரச அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதாக இருந்தாலும், தற்போதைய எதிர்க்கட்சிக்கு அதிகாரம் இல்லாவிட்டாலும், மக்களுக்கு பெரும் சேவையை செய்துள்ளது.
வெறும் மேடைகளில் பேசுவதால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
நாட்டின் மாற்றுக் கட்சிகள் என்று கூறும் தரப்புகள் அதிகாரம் இன்றி மக்களுக்கு எதுவும் ஆற்றவில்லை. எனவே, அதிகாரம் இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய தரப்புகளுக்கு நாட்டை கட்டியெழுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென்றே நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
மக்கள் புத்திசாலித்தனமாக சிந்திக்க வேண்டும்
அதிகாரம் இல்லாமல் இவ்வாறான சேவையை மேற்கொள்வார்கள் என்றால், அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டு எவ்வளவு சேவை மேற்கொள்ள முடியும்.
மக்கள் புத்திசாலித்தனமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். சீரழிந்து,வங்குரோத்தாகி பல்வேறு விடயங்களால் பிளவுபட்டுள்ள நாட்டை ஐக்கிய மக்கள் சக்தி தரப்பாலே மீண்டும் கட்டியெழுப்ப முடியும் .
இதைவிடுத்து வேறு மாற்று இல்லை” - என்றார்.
