இரண்டரை வருட சம்பளத்தை மக்களுக்காக பகிர்ந்தளிக்க தயாராகும் எம். பி!
Sri Lanka Politician
Sri Lanka
By pavan
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பெற்றுக்கொண்ட கொடுப்பனவுகள் மற்றும் வேதனத்தை மீண்டும் மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு வழங்கவுள்ளதாக மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
மாத்தறை - அக்குரெஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலின் போது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனை குறிப்பிட்டிருந்ததாகவும், அதற்கு இணங்கவே தாம் இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் கருணாதாச கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
மக்கள் நல வேலைத்திட்டங்கள்
இதற்கமைய சுமார் 120 லட்சம் ரூபாவினை மாத்தறை மாவட்டத்தில் இயங்கும் 220 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பல்வேறு மக்கள் நல வேலைத்திட்டங்களுக்காக பகிர்ந்தளிக்க தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டிள்ளார் .

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி