தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட அவுஸ்திரேலிய பிரஜை
மட்டக்களப்பில்(Batticaloa) அவுஸ்திரேலியா(Australia) நாட்டை சேர்ந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மாமாங்கம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று(26) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், மானிப்பாயைச் பிறப்பிடமாக கொண்ட 71 வயதுடைய செல்லத்துரை கங்காதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காவல்துறை விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து மட்டக்களப்பு, மாமாங்கம் 6ஆம் குறுக்கு வீதியிலுள்ள வீடு ஒன்றில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று(25) படுக்கையறையில் இரவு நித்திரைக்கு சென்றவர் அதிகாலையில் நித்திரையில் இருந்து எழும்பாத நிலையில் அவர் உயிரிழந்துள்ளதை கண்டு காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சடலத்தை மீட்ட காவல்துறையினர் சடலத்தை நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 4 நாட்கள் முன்
