கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல்! இன்றோடு 21 வருடங்கள்
தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய தாக்குதல் இடம்பெற்று இன்றோடு 21 வருடங்கள் ஆகின்றன.
கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை 25 இடம்பெற்ற தாக்குதலில் 7 விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்ட அதேவேளை 14 வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலே இலங்கை வரலாற்றின் மிக முக்கியமான தாக்குதல் என கூறப்படுகிறது.
இது தாக்குதலில் இரண்டு கிபிர் விமானங்கள், ஒரு மிக் ரக விமானம், இரண்டு எம்1-17 , மூன்று கே-8 விமானம் உள்ளிட்டவைகள் தகர்க்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதல்
விடுதலைப் புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் நாட்டின் பொருளாதாரத்தில் வரலாறுகணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.
இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதாக கணிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.