அரச வங்கியில் ஆறு கோடி ரூபா நிதி மோசடி: சிக்கிய பெண் அதிகாரி
Sri Lanka Police
Government Employee
Sri Lanka Police Investigation
Crime
By pavan
அரச வங்கி ஒன்றில் இருந்து 6 கோடி ரூபாவை மோசடி செய்த முன்னாள் பெண் அதிகாரி ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் அதே வங்கியில் உதவி பொது மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
2017ஆம் ஆண்டில், அரச வங்கிக்குச் சொந்தமான 48 தனியார் கடன் கோப்புகள் மூலம் தவறான தகவல்களை அளித்து 6 கோடி ரூபா தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது.
முதலாவது சந்தேகநபர்
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முதலாவது சந்தேகநபர் குறித்த அரச வங்கியின் உள்ளகக் கணக்காய்வு அதிகாரி எனவும், அவர் உயிரிழந்துவிட்டார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலதிக விசாரணையை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 8 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்