மட்டக்களப்பு கடலில் ஏற்பட்ட ராட்சத அலைகள் - வீதிக்கு இழுத்துச் செல்லப்பட்ட படகுகள்!
மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் ராட்சத கடல் அலை உருவாகிய நிலையில் கடல் நீர் வீதிக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை பகல் வேளைகளில் மற்றும் இரவு வேளையும் இவ்வாறு ராட்சத அலை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சீரற்ற கால நிலை நிலவி வரும் நிலையில் பாரிய கடல் அலை ஏற்பட்டுள்ளது.
பாரிய அலை ஏற்பட்டதன் காரணமாக கடல் நீர் வீதிக்கு வந்ததுடன் மீன்பிடி படகுகளையும் மீனவர்கள் வீதியின் ஓரத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.
மீனவர்களுக்கு ஏற்பட்ட சிரமம்
புதிய காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடலரிப்புக் காரணமாக இந்தப் பகுதியிலுள்ள மீனவர்கள் தமது மீன்பிடி படகுகளை நிறுத்துவதில் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் திங்கட்கிழமை மாலையும் ஏற்பட்ட பாரிய கடல் அலையினால் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் புதிய காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் மீனவர்கள் மீன்பிடி படகுகளை வீதி ஓரங்களில் நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.