கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிசூடு : தொழிலதிபர் படுகாயம்
Sri Lanka Police
Colombo
Gun Shooting
By Jaso
கொழும்பு பொரலஸ்கமுவவின் பெல்லன்வில பகுதியில் இன்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொழிலதிபர் ஒருவர் காயமடைந்து, களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விடுமுறை விடுதியின் உரிமையாளரான 55 வயதுடைய நபர் ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.
காவல்துறை வெளியிட்ட தகவல்
துப்பாக்கிச் சூடு நடந்தபோது, காயமடைந்த நபர் தனது விடுதிக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்கள் அல்லது சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்று காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 12 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி