காவல் நிலையத்திற்குள் லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் கைது
Sri Lanka Police
Kurunegala
Drugs
By Aadhithya
குருநாகல் (Kurunegala) பிரதேசத்திலுள்ள காவல் நிலையமொன்றில், காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட குற்றசாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று ( 13) இரவு கைது செய்யப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில், போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களை விடுவிக்க 50,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள்
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர் மற்றும் 20 மற்றும் 28 வயதுடைய இரு சந்தேக நபர்களும் குருநாகல் - ஹிரியால, அம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்கள் மூவரும் இன்று (14) மஹவ நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்