பிரித்தானிய பிரதமரின் பாதுகாவலர் கைது: வெளியான காரணம்
United Kingdom
Rishi Sunak
World
By Laksi
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் (Rishi Sunak) பாதுகாவலர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரிஷி சுனக்கின் பாதுகாவலர்களில் ஒருவரான கிரேக் வில்லியம்ஸ் (Craig Williams) என்பவரே தவறான நடத்தைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
பணியிடை நீக்கம்
குறித்த அதிகாரி பிரதமர் ரிஷி தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, தேர்தல் எந்த நாளில் நடைபெறும் என தேர்தல் திகதி குறித்து 100 பவுண்ஸ் பந்தயம் கட்டியுள்ளார்.
இந்த தகவல் சம்பந்தப்பட்ட துறைக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு, வில்லியம் குறித்து காவல்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 22 மணி நேரம் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்