இலங்கையின் பொருளாதார நிலைமை: நாடாளுமன்றுக்கு அறிவித்த ஆளுநர்
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) இன்று (4) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
இலங்கையில் பணவீக்கம் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொள்கை வட்டி வீதத்தைக் குறைக்க முடிந்ததாகத் தெரிவித்த வீரசிங்க, மாற்று விகிதத்தை ஸ்திரப்படுத்துவதன் மூலம் ரூபாயை பலப்படுத்த முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலை போராட்டத்தை காட்டி கொடுத்தவர்கள் தமிழ் பொது வேட்பாளரின் பின்னணியில்...சபையில் சாணக்கியன் சீற்றம்
பொருளாதார நெருக்கடி
மேலும், நாட்டின் நிதி அமைப்பை ஸ்திரப்படுத்துவது தொடர்பான விடயங்களையும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும் வங்கி முறை வீழ்ச்சியடைவதை தடுக்க முடிந்தமை விசேட விடயம் என சுட்டிக்காட்டிய ஆளுநர், மத்திய வங்கி சட்டம் மற்றும் அதனை ஒழுங்குபடுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட புதிய சட்டங்கள் வங்கி அமைப்பு அதற்கு உதவியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு! ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கவுள்ள முடிவு
தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் உத்தியோகத்தர்! அக்கரைப்பற்று முன்னாள் மேயருக்கு விளக்கமறியல் நீடிப்பு!