கொழும்பு - வெள்ளவத்தை கடற்கரையில் கத்தியுடன் ஒதுங்கிய சடலம்! காரணம்?
இலங்கையின் வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று ஒதுங்கிய இரண்டு ஆண்களின் உடலங்களில் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர், 24 வயதான மாலைதீவை சேர்ந்தவர் என்பது அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு உடலங்களும் வெள்ளவத்தையின் கரையில் இருந்து 300 மீற்றருக்கு அப்பால் இருந்து மீட்கப்பட்டன.
இந்தநிலையில் அடையாளம் காணப்பட்ட மாலைதீவு பொதுமகனின் உடலத்தில் காயங்கள் காணப்படுவதாக காவல்துறையின் சிரேஸ்ட பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வசித்து வந்த ஆஸிம் நசீர் என்ற இந்த மாலைதீவு மாணவரை காணவில்லை என்று ஏற்கனவே மாலைதீவின் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இந்தநிலையில் அவரை கடைசியாக கடந்த 4ஆம் திகதியன்று கறுப்பு நிற ரீசேர்ட் அணிந்த நிலையில் கண்டதாக உறவினர்கள் தெரிவித்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.