டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு : வெளியான தகவல்
2025 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், 59,245 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கிய 112,442 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்தார்.
சிறு போகத்திற்கான உர மானியம்
இழப்பீடு வழங்குவதற்காக மொத்தம் 8.886 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் சிறு போகத்திற்கான உர மானியத்தை 95 சதவீதமான விவசாயிகள் பெற்றுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, 449,750 ஹெக்டேர் பயிர்ச்செய்கை நிலத்தை உள்ளடக்கிய 667,460 விவசாயிகள் உர மானியத்தைப் பெற்றுள்ள நிலையில் உர மானியத் திட்டத்திற்கான மொத்த செலவினம்13.492 பில்லியன் ரூபாயாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |