வாகரையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..! காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்
Sri Lanka Police
Batticaloa
By Vanan
வாகரை காவல்துறை பிரிவிற்குட்பட்ட காயங்கேணி கடற்கரைப் பிரதேசத்தில் இளைஞனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
தூக்கிட்ட நிலையில், 18 வயதுடைய இளைஞன் ஒருவரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வாகரை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு காவல்துறையினரின் உத்தரவின் பேரில் அவசர சேவை வாகனத்தின் உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை
மரணத்துக்கான சரியான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவர் காயங்கேணி மத்தி, மாங்கேணி எனும் முகவரியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வாகரைப் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் நிலையில், பிரதேச பரிசோதனைகளின் பின்னர் இன்று உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி