பலிக்கடாவாக்கப்பட்ட தேசபந்து தென்னகோன் : பின்புலத்தில் உள்ளவர்கள் யார்..!
அரசியல் தலைவர்களின் தேவைகளை நிறைவேற்ற முற்பட்டதால்தான் தேசபந்து இன்று பலிகடாவாக்கப்பட்டுள்ளார்.எனவே தேசபந்துவுக்கு ஆலோசனை வழங்கிய, வழிநடத்திய அரசியல்வாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பற்றியும் தேடப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று(06) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டில் சந்தேகம்
கடந்த காலங்களில் எல்லா விடயங்களுக்கும் நீதிமன்றத்தை நாடிய தேசிய மக்கள் சக்தி, காவல்துறை மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஏன் நீதிமன்றத்தை நாடவில்லை. அவருடன் ஏதேனும் டீல் இருந்ததா?
அரச அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தேசபந்து தென்னகோனுக்கு இவ்வாறான விடயங்களை செய்வதற்கு ஆலோசனை வழங்கிய அரசியல்வாதிகளும் உள்ளனர். அவர்கள் பற்றி ஏன் கதைக்கப்படவில்லை?
தேசபந்து விடயத்தில் இருந்து தற்போதைய அரச அதிகாரிகள் ஒரு விடயத்தை கற்றுக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளுக்காக, அரசியல் தேவைகளை நிறைவேற்ற முற்பட்டால் இறுதியில் இந்நிலைதான் ஏற்படும் என எச்சரிக்கையையும் விடுத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
