நீண்ட காலத்தின் பின் அதிகரித்த கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையில் நீண்ட காலத்தின் பின்னர் தொடர்ச்சியான வளர்ச்சி காணப்படுகின்றதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் தற்போது எரிபொருள் விநியோகம் சீராகத் தொடங்கியதனால் கடந்த ஒரு வார காலமாக இப் பங்குச்சந்தைப் புள்ளிகள் தொடர்ச்சியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
இந்நிலையில், நேற்றைய தினம் அனைத்துப் பங்குகளின் விலைச்சுட்டி 206.17 புள்ளிகளினால் அதிகரித்துள்ளது. இது 2.46 வீத வளர்ச்சியாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நேற்றைய நாளின் இறுதியில் அனைத்து விலைச்சுட்டிகளும் 8.706 வீதத்தினால் அதிகரித்துக் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பரிவர்த்தனைகளின் முடிவு
நீண்ட காலத்தின் பின்னர் கடந்த 4ஆம் திகதி கொழும்பு பங்குச் சந்தையின் தினசரி புரள்வு 3 பில்லியன் ரூபாவை கடந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதன்படி, நேற்றைய தினம் கொழும்பு பங்குச்சந்தை பரிவர்த்தனைகளின் முடிவில் 3.79 பில்லியன் ரூபா பதிவாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.