இரட்டைக் குடியுரிமை உடையவர்களை அரசால் வெளிப்படுத்த முடியாது..! அரச தரப்பிலிருந்து வெளியான தகவல்
Parliament of Sri Lanka
Bandula Gunawardane
Sri Lanka Politician
By Kanna
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் குறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தும் வழிமுறை அரசாங்கத்திடம் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
எனக்கு இரட்டை குடியுரிமை கிடையாது
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க முடியாது.
நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களை நீதித்துறையின் மூலம் கண்டுபிடிக்க முடியும் ", எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், தனக்கு இரட்டை குடியுரிமை இல்லை எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.