அத்தியாவசிய சேவையாகும் கல்வி - அரசாங்கத்திற்கு பகிரங்க எச்சரிக்கை!

Sri Lanka G.C.E.(A/L) Examination Sri Lanka Government Ceylon Teachers Service Union
By Kalaimathy Apr 25, 2023 04:46 AM GMT
Report

கல்வியை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சிறிலங்கா அதிபர் விடுத்துள்ள அறிக்கைக்கு ஆசிரியர் சங்கம்  கண்டனம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை முடிவடைந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் விடைத்தாள்களை திருத்துவது குறித்த பிரச்சினைக்கு அரசாங்கம் சாதகமான தீர்வை வழங்கவில்லை எனக் கூறும் இலங்கை ஆசிரியர் சங்கம், கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காத மக்கள் பலம் இல்லாமல் ஆட்சிக்கு வந்த அதிபரின் இந்த ஜனநாயக விரோத அறிவித்தலை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

ரணிலின் ஜனநாயக விரோத செயல்

அத்தியாவசிய சேவையாகும் கல்வி - அரசாங்கத்திற்கு பகிரங்க எச்சரிக்கை! | Education Exam President Ranil Teachers Union 2023

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்கள் பிணைக் கைதிகளாக வைத்திருக்க ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என கல்வி மற்றும் உயர்கல்வி, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்களினால் 2023ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக ஏப்ரல் 19 ஆம் திகதி அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொடர்பாக இந்த வாரத்திற்குள் மாற்று முன்மொழிவுகள் மற்றும் தீர்வுகள் உள்ளிட்ட குறிப்பிட்ட வேலைத்திட்டத்தை முன்வைக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த அதிபர், பரீட்சை தொடர்பான பணிகளை அத்தியாவசிய சேவையாக பெயரிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அறிவித்துள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.

“பரீட்சையை அவசரச் சேவையாகப் பேணுவதற்குத் தேவையான ஒழுங்குமுறைகளைச் செய்ய எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த அதிபர், கடந்த வருடம் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுத்த குழுக்களையே ஈடுபடுத்தி இந்த வருடத்திற்கான உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்."

பொருளாதார நெருக்கடி

அத்தியாவசிய சேவையாகும் கல்வி - அரசாங்கத்திற்கு பகிரங்க எச்சரிக்கை! | Education Exam President Ranil Teachers Union 2023

அந்த நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டால் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்ப்பார்ப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் விடைத்தாள் மதிப்பீட்டுக் கட்டணம் அதிகரிக்கப்படாமையால் ஆசிரியர்கள் போதியளவு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பல்கலைக்கழக போராசிரியர்கள தொழிங்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையால் உயர்த தர விடைத்தாள் மதிப்பிடும் பணியை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

விடைத்தாள் மதிப்பீட்டிற்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சர் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து அனுமதி பெற்ற போதிலும், அதிபரின் கீழ் உள்ள திறைசேரி அந்த அமைச்சரவை பத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யாமல், இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், உயர்தர மாணவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் அதிபர், கல்வியை அத்தியாவசிய சேவையாக கருதி ஜனநாயக விரோத கருத்துக்களை வெளியிடுவது மிகவும் வருந்தத்தக்கது என ஆசிரியர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் போராட்டம்

அத்தியாவசிய சேவையாகும் கல்வி - அரசாங்கத்திற்கு பகிரங்க எச்சரிக்கை! | Education Exam President Ranil Teachers Union 2023

மேலும், உயர்தரப் பரீட்சையின் தரத்தைப் பேணுவதற்கு, பல்கலைக்கழகப் பேராசிரியர்களை கண்காணிப்பாளர்களாகக் கொண்டிருத்தல் அவசியமான வேளையில் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்காமல் அவர்கள் இன்றியே விடைத்தாள் மதிப்பீடு மேற்கொள்ளப்படுமாயின் அது பாரதூரமான பிரச்சினையாக அமையுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 கல்வியை அத்தியாவசிய சேவையாக அறிவித்தால் அதற்கு எதிராக ஆசிரியர் அதிபர்கள் அணி திரளுவோம் என ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"பாடப்புத்தகங்களை முழுமையாக வழங்குவதற்கும், சீருடைத் துணிகளை முழுமையாக வழங்குவதற்கும், கல்வி அமைப்பில் சுமார் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் மற்றும் பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு கல்வியின் இன்றியமையாத பணிகளை நிறைவு செய்யாத சூழ்நிலையில், கல்வியை அத்தியாவசிய சேவையாக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டை அதிபர் மேற்கொண்டால், அதற்கு எதிராக இலங்கை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்ப்பினை வெளியிடுவார்கள் என தெரிவித்துள்ளோம்.”

அரசாங்கம் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதுடன் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு போதிய கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.

ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026