ரணில் அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பம் - ஹிருணிகா வெளிப்படை

Ranil Wickremesinghe Hirunika Premachandra SL Protest Sri Lanka Anti-Govt Protest
By Vanan Nov 12, 2022 02:00 PM GMT
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணித் தலைவி ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பிலான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இதற்கான சிறந்த உதாரணம் என ஹிருணிகா பிரேமச்சந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத தடை சட்டம்

ரணில் அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பம் - ஹிருணிகா வெளிப்படை | Fall Of Ranil S Government Begins Hirunika

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை தற்போது நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துமாறு காவல்துறையினருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது எமக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.

முன்னாள் அதிபருக்கும் தற்போதைய அதிபருக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை என்பதை தற்போது மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

தற்போது இலங்கையில் எந்தவொரு பிரச்சினையும் இல்லாதிருந்தாலும் மக்கள் வீணாக போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள் என்ற விடயத்தை அரசாங்கம் மக்கள் மனதில் திணிக்க முயற்சிக்கிறது. இதற்காக அரசாங்கத்திற்கு விசுவாசமானவர்கள் வீதியில் இறங்கி குரல் கொடுக்கிறார்கள்.

ரணில் அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பம் - ஹிருணிகா வெளிப்படை | Fall Of Ranil S Government Begins Hirunika

அவ்வாறு குரல் கொடுப்பவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் காரணமாகவே அவர்களுக்கு தற்போது எரிபொருள், எரிவாயு போன்ற அனைத்தும் கிடைத்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் தமக்கு வேண்டிய விதத்தில் மக்களை வாழுமாறு வலியுறுத்துகிறது. காவல்துறையினர் மக்களுக்கு வேண்டிய பாதுகாப்பை வழங்காது மக்களை அடக்க முயற்சிக்கிறார்கள்.

இராஜாங்க அமைச்சர் பதவி

ரணில் அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பம் - ஹிருணிகா வெளிப்படை | Fall Of Ranil S Government Begins Hirunika

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பதவி விலகியதன் பின்னர் அந்தப் பதவி எனக்கு கொடுக்கப்படுவதாக ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் பொய்யானவை.

இராஜாங்க அமைச்சர் பதவியில் ஒருவர் இல்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக அந்தப் பதவியை ஏற்க வேண்டிய தேவை எனக்கு இல்லை.

இலங்கையில் எதிர்வரும் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு தேவையான பிரசாரங்களை மேற்கொள்ள தேவையான தைரியம் எனக்கு இருக்கிறது. மக்கள் மத்தியில் தைரியமாக என்னால் செல்ல முடியும்” - என்றார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024