தந்தையின் கோர செயல் -பெற்ற குழந்தையை தூக்கி தலைகீழாக அடித்து வன்முறை
தான்பெற்ற குழந்தையையே தூக்கி தலைகீழாக அடித்த தந்தையின் கோரச்செயல் தொடர்பான தகவலொன்று வெளியாகி உள்ளது.
மூன்று வயதான குழந்தையையே அவர் தூக்கி, நிலத்தில் தலைகீழாக அடித்துள்ளார்.
தலை பிளந்து காதுகளில் இருந்து இரத்தம்
குழந்தையை தூக்கி தலைகீழாக அடித்த அவர், மனைவியின் முன்னே சென்று நஞ்சருந்தியுள்ளார். அதன்பின்னர் சந்தேகநபரையும் குழந்தையையும் பொதுமக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
காயமடைந்த குழந்தையின் தலை பிளந்து காதுகளில் இருந்து இரத்தம் வெளியேறியதால், கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய தந்தை கைது
அடிப்படை சிகிச்சையை பெற்றுக்கொண்டதன் பின்னர் வைத்தியசாலையில் இருந்து சந்தேகநபர் தப்பியோடியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவிசாவளை இஹல தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் நபரே கைது செய்யப்பட்டவராவார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளை தற்போது அனாதை இல்லத்தில் தங்கியுள்ளது.
