145 பயணிகளுடன் திடீரென தீப்பிடித்த விமானம்..! (காணொளி)
விபத்து
ஏர் இந்தியாவின் எக்ஸ்பிரஸ் விமானம் மஸ்கட் விமான நிலையத்தில் தீப்பிடித்து விபத்துகுள்ளாக்கியுள்ளது.
குறித்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என விமான நிலையம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் கொச்சிக்கு செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமே இவ்வாறு ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் உள்ள விமான நிலையத்தில் நிலையத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இயந்திரத்தத்தில் ஏற்பட்ட பழுது
#NDTVBeeps | Watch: Air India Express Plane Catches Fire At Muscat Airport, Passengers Safe pic.twitter.com/DcHZZzOAOC
— NDTV (@ndtv) September 14, 2022
இந்த திடீர் விபத்திற்கு விமானம் புறப்படுவதற்கு முன்பு இயந்திரத்தத்தில் ஏற்பட்ட பழுதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் தீ பிடித்த போது விமானத்தில் உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அத்துடன் விமானம் தீப்பிடித்த போது மொத்தமாக 145 பயணிகள் விமானத்தில் இருந்துள்ளனர், அவற்றில் நான்கு பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

