கொழும்பு புறநகர் பகுதியில் மீட்கப்பட்ட கைக்குண்டு
Colombo
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Harrish
கொழும்பு(Colombo) புறநகர் பகுதியில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ராஜகிரிய, வெலிக்கடை பிரதேசத்தில் உள்ள கட்டிடத்தின் குப்பை மேட்டில் இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த கைக்குண்டு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறைனர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
அதேநேரம் அதில் பொறிக்கப்பட்டுள்ள எண் தெளிவாக இல்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த கைக்குண்டு காவல்துறைக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளதுடன் யாரோ ஒருவர் இதனைக் கொண்டு வந்து வீசியிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி