இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவருக்கு நேரவிருந்த விபரீதம்
Sri Lanka Police
Sri Lanka Tourism
By Sumithiran
இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள மிரிஸ்ஸா கடற்கரையில் நேற்று (20) நீரில் மூழ்கிய ஒரு வெளிநாட்டவர் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொடவிலா காவல் பகுதியில், நீச்சல் அடித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணி பலத்த நீரோட்டத்தில் சிக்கியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
கடற்கரையில் பணியில் இருந்த காவல்துறையினரால் மீட்பு
கடற்கரையில் பணியில் இருந்த மிரிஸ்ஸா காவல் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவல்துறை சார்ஜென்ட் அஜந்தா (59416), காவல்துறை கான்ஸ்டபிள் திசாநாயக்க (96986) மற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் கஹாவட்டா (105268).ஆகியோராவர்.
மீட்கப்பட்ட நபர் 25 வயதுடைய ஜோர்ஜியாவைச் சேர்ந்த நபர் என அடையாளம் காணப்பட்டார். சுற்றுலாப் பயணிக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |